Saturday, February 22, 2014

டிடி பொதிகையில் பாண்டூ (PANDU IN DD POTHIGAI...)

டிடி பொதிகை(DD Pothigai) தொலைக்காட்சியில் 23.02.14 ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு, நான் கலந்துகொண்ட ‘கொஞ்சம் கவிதை... கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்வை பாடலாசிரியர் திரு. பிறைசூடன் அவர்கள் நெறிப்படுத்த, கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் உடன் நானும் கலந்துகொள்கிறோம். தவறாது பார்த்து தங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி.
 - பாண்டூ@9843610020; www.pandukavi16.blogspot.in; pandukavi16@gmail.com.

Friday, February 21, 2014

நான் மனுஷி!

மகளிர்தினச் சிறப்புக் கவிதை


எனது பொறுமை
நசுங்கிக் கொண்டிருக்கிறது
உன் உறவுப் பாறையின்
அடியில்…
மதுவாடை சகிக்க
என் மூக்கு
கல்லால் செதுக்கப்படவில்லை…
மற்றவனின்
புகழ்புராணத்தைப் பொறுக்க
என் காதுகள்
மரத்தாலானவையல்ல…
நானும்
எலும்புகளால்.
தசையால்,
ரத்தத்தால்,
உணர்வுகளால்,
கனவுகளால்,
ஆக்கப்பட்டவளென்பதை
உணர்ந்திருக்கிறாயா நீ?
ஒன்றுக்கு
மூன்று பேரின் உடலை
நீ பகிர்ந்து கொண்டாலும்
ஒழுக்கத்தின்
உச்சியில் நிற்கிறாய்!
நான் உன் காலடியில்
தவம் புரிந்தாலும்
சோரம் போகிறவளாக
சோதிக்கப்படுகிறேன்!
இது
முரண்பாட்டுக் கூச்சல்
மூடர்களின் கூடாரம்
வீசியெறிகிறேன்
இதோ நீ தந்த
மனைவிப்பட்டம்
தாலி, மெட்டி
அடையாளங்கள்
எனக்கெதற்கு….
பயம் உணர்ந்து
உடலை சுருக்குவதும்
உறுப்புகளை
இழுத்துக்கொள்வதும்
ஆமைக்கு உரியது
நான் மனுஷி!
********************
நன்றி : 
https://rammalar.wordpress.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF/

Monday, February 10, 2014

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

மேலும் படிக்க...
www.thozharjeeva.blogspot.in/2014/02/blog-post_10.html

அறிவியல் புரட்சியாளர் சார்லஸ் டார்வின்


        இயற்கை அறிவியலின் ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் டார்வின்  1859 நவம்பர் 2 இல் ‘உயிருனங்களின்  தோற்றம்’ (on the ori-gin of species) என்ற நூலை உடனேயே அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவை கொண்ட பத்திரிக்கைகளும்  இதைக் காழ்ப் புணர்ச்சியுடன் திட்டித் தீர்த்தன. கிருத்துவத் திருச்சபைகள் சாபமிட்டன. அதே சமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாகத் தோன்றியதே தவிர கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்று இவற்றில் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது. மனிதன் விலங்குலகிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டுபிடித்ததானது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞானக் கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க : http://thozharjeeva.blogspot.in/2014/02/blog-post.html

       வாழ்க அவர் புகழ் உலகு உள்ளவரை !
(09.02.2014 சார்லஸ் டார்வின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: ஆர்.பாலச்சந்திரன்,
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
 விருதுநகர் துணைத் தலைவர்.
தொடர்புக்கு:9486207060
நன்றி : www.thozharjeeva.blogspot.in

Wednesday, January 22, 2014

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்

   
 மாறிவரும் ஊடகச் சூழலில், டி.ஆர்.பி.யை உயர்த்தும் நோக்கில், அனைத்துத் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் இலக்கியத்திற்கான இடத்தை ஓரங்கட்டி விட்டன, ஏன் இல்லாமலே செய்துவிட்டன எனலாம். ஏதோ ஓரிரு நாட்களில் பட்டிமன்றத்துடன் நிறுத்துக்கொள்கின்றன. கவிதை குறித்தோ, கதையாடல் குறித்தோ, இலக்கியம் குறித்தோஅக்கரைப்படுவதில்லை.

     இத்தகு சூழலில் அரசு தொலைக்காட்சியான, டிடி பொதிகைத் தொலைக்காட்சி, இலக்கியத்திற்காக கனிசமாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிவருவது மகழ்ச்சி அளிக்கிறது.  அதில் ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியும் ஒன்று. இதனை முன்னர் பேராசிரியர் ரமணன் அய்யா நெறிப்படுத்தினார். தற்போது பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் அதனை நெறிப்படுத்துகிறார்.

       பிறைசூடன், இந்நிகழ்வை அருமையாக கொண்டு செல்கிறார். எளிமையும், விசய ஞானமும் ஒருங்கே அமைந்தவராக காட்சியளிக்கிறார்.   பழம்பெரும் கவிஞர்கள் மட்டுமல்லாது, ஆரம்ப கட்ட எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது இந்நிகழ்வை மேலும் கவனிக்க வைக்கிறது.

     இந்நிகழ்வில் பங்குகொள்ள சமிபத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. 21.01.2014 அன்று ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியின் படமாக்களில் நானும் ஒரு விருந்தினாராய் பங்குபெற்றேன். அதில் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் பங்கேற்றார். பாடலாசிரியர் பிறைசூடன் மற்றும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களை அப்போது தான் முதல் முறையாக சந்தித்தேன். அ.வெண்ணிலாவின் கணவர் மு.முருகேசனைப் பற்றி கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி வாயிலாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்று தான் அவரையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல மனிதர். அவரும் ஒரு எழுத்தாளர். நிறைய கவிதை மற்றும் ஹைக்கூ தொகுப்பு எழுதியிருக்கிறார். மேலும் அகநி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

     பாடலாசிரியர் பிறைசூடனை நாம் அறிந்ததே. கவிஞர் வெண்ணிலா அவர்களின் சமீபத்திய படைப்பான ‘துரோகத்தின் நிழல்’ எனும் கவிதைத் தொகுப்பு ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ நட்த்திய பரிசுப் போட்டியில் 2013ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

     ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியின் படமாக்கல் முடிந்ததும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ வில் 700க்கு மேற்பட்ட புத்தக விற்பனையகங்களைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. மைதானத்தில் திரு. காசி அனந்தன் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அங்கு வள்ளலார் பதிப்பகத்தாரின் தமிழ்த்தேசிய நாட்காட்டி  (விலை. ரூ.100) ஒன்றை வாங்கிவிட்டு, முதலில் நண்பர் முகேசனின் அகநி பதிப்பக விற்பனையகத்திற்கு சென்றேன் (கடை எண். 277). பிறகு ஒவ்வொரு அரங்கமாக பார்த்து மாலை 6 மனியளவில் வெளியேறினேன்.

        ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 1.30 க்கு டிடி பொதிகையில் ஒளிபரப்பாகிறது. நான் கலந்துகொண்ட நிகழ்வு 16.02.2014 ஒளிபர்ப்பாக உள்ளது. தவறாது பாருங்கள். தங்கள் கருத்தைத் தாருங்கள். நன்றி.

பாண்டூ, சிவகாசி.
pandukavi16@gmail.com
www.pandukavi16.blogspot.in
9843610020
     

Thursday, January 9, 2014

தலைகீழ்பாடம்!?


மனிதன்,
‘நாம் வெளியிடும்
 ஆக்சிஜனை கிரகித்துக் 
கொண்டு நமக்குத் தேவையான 
கார்பன் டை ஆக்சைடை 
வெளியிடும் பிராணி...
அதுவே நமது நுரையீரல்’
வகுப்பறையில் பாடம்... 
ஆம்! அது
ங்
ளி
ன்
 பள்ளிக்கூடம்!?

- பாண்டூ,
6, ஜவுளிக்கடை வீதி,
சிவகாசி - 626123.
செல்: 9843610020
pandukavi16@gmail.com


Wednesday, January 8, 2014

இசைப்பாடல் போட்டிச் சான்றிதழ்...

04.01.2014 அன்று, தோழர் வி.கார்மேகம் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நரிமேடு கிளை, மதுரை நடத்திய இசைப்பாடல் போட்டியில் கலந்துகொண்டமைக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.