Tuesday, May 17, 2016

#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் - டுவிட்டூ பாண்டூ#

#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் :
                         - டுவிட்டூ பாண்டூ#

1. தேவ மகளா? தோகை மயிலா? என எண்ணிக் குழம்புது...
நீயோர் பெண்ணென நம்ப மறுக்குது  என் நெஞ்சு!

*அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.(1081)

2. பார்க்காதே... என் பார்வைக்கு எதிர்பார்வை பார்க்காதே!
ஒரு அம்புக்கு படை கொண்டு வந்தா தாக்குவது?

*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணக்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.(1082)

3. கொல்லும் எமனுமாகும், உறவுமாடும், மிரண்டும் ஓடும்...
ப்பா... என்ன உன் பார்வை!?

*கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.(1083)

4. உன்னைப் போலத்தான்... உந்தன் கண்ணும்!
உயிர் குடித்தே என்னைக் கொல்லும்!

*கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.(1084)

5. எமனை, ஆண் என்றே எண்ணி வந்தேன்...
உன்னைக் காணும் வரை!?

*பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.(1085)

பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: தகையணங்குறுத்தல்

நன்றி: குட்டி ஜப்பான் சிவகாசி செய்தித்தாள் இதழ், ஏப்ரல் 2016

#கவிதையின் நவீன வடிவத்தில் ஹைக்கூவும் ஒன்று. அது மூன்று அடிகள் கொண்டது.
  இதையே மரபுக் கவிதையில் சிந்தியலடி என்பர். அதே போல் இரண்டு அடிக் கவிதையைக் குறலடி என்பர்.
  அப்படி இரண்டு அடியாக நவீன கவிதையை வார்த்தால் என்ன? என்ற முயற்சியே இந்த டுவிட்டூ.

No comments:

Post a Comment