Wednesday, June 8, 2016

கவியாட்படை

#புத்தக்கண்காட்சி
#சென்னை 39 வது புத்தகக் கண்காட்சி
  5.6.2016 சனி, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். கீதம் பதிப்பகத்தாரின் 6 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
   அதில்  'கவியாட்படை' எனும் 36 கவிஞர்கள் பங்கு கொண்ட கூட்டுத் தொகுப்பும் வெளிடப்பட்டது. 36 கவிஞர்களுள் நானும் ஒருவன். எனது "பாதை வழி மரணம் போகிறவர்கள்"  என்கிற கவிதை அதில் இடம்பெற்றது.
  நூலுக்கு தமிழ்த் திரைப்பாக்கூட நிறுவனர் பாடலாசிரியர் பிரியன் வாழ்த்துரை வழங்கியிருந்தார். பாடலாசிரியர்கள் பிரியன் மற்றும் அண்ணாமலை அவர்கள் வெளியிட நூல்களைப் பெற்றுக் கொண்டது கூடுதல் சிறப்பு. நிகழ்வை ஒருங்கிணைத்த சிவராசு தோழருக்கு நன்றி.

மேலும்.. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள் மணிமுடி அய்யா மற்றும் ஜான்சன் அய்யா நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.









No comments:

Post a Comment