Sunday, November 13, 2016

செல்லாக்காசு

இதய ராஜாங்கத்தின்
காதல் தலைவியாய்
உன்னை வரித்தேன்...

தருணம் பார்த்துக்
காதலை மொழிந்திட
ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் போல்
உயர்மதிப்பான வார்த்தைகளாய்த்
தேடித்தேடி சேமித்தபடி நான்!

என் வார்த்தை வங்கியின்
சேமிப்புகள் யாவும் செல்லாதென....
சற்றும் எதிர்பாராதொரு கணத்தில்
அறிவிப்பை வெளியிட்டபடி
கடக்கிறாய் நீ!

இதோ! தினம்,
நீ வரும் வீதியில் நிற்கிறேன்...
செல்லாக்காசான அவ்வார்த்தைகளைக்...
கவிதையாய் மாற்றியபடி!

இப்போது என் கவலை எல்லாம்...
இந்தக் கவிதைகளை யாரிடம் மாற்றுவது!?!

                    - *பாடலாசிரியர் பாண்டூ*
                    -  *9843610020*
                    - www.pandukavi16.blogspot.inin

No comments:

Post a Comment