Thursday, September 15, 2016

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#
   அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறையும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து சென்னை கலைஞன் பதிப்பகம் வாயிலாக  புலமை மிக்க தமிழறிஞர்களின் பணிகளை ஆவணப் படுத்தும் அரிய முயற்சியாக 400 க்கும் மேற்ப்பட்ட நூல்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் என்னைப் பற்றிய நூலொன்றும் இடம் பெற்றது மகிழ்ச்சி. நூலை செம்மையுறப் படைத்த S.F.R. மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் திரு.ஜெ.புவனேஸ்வரி அவர்களுக்கும், கல்லூரிக்கும் மனமார்ந்த நன்றி.


Wednesday, September 14, 2016

தமிழ் இலக்கியங்களில் படைப்பும் படைப்பு ஆளுமையும்

14.9.16 புதன் கிழமை
#சிவகாசி S.F.R. மகளிர் கல்லூரி மற்றும் தமிழ் உயராய்வு மையம் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியங்களில் படைப்பும் படைப்பு ஆளுமையும்' என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திரு. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தோழரின் 'ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல' கவிதைத் தொகுப்பை முன்வைத்து "திருதிராஷ்டிர ஆலிங்கனம்" என்கிற கட்டுரையை வாசித்தளித்தேன். நிகழ்வில் பேசிய பதிப்பகத்தார் திரு.தமிழ்ப்பரிதி அவர்களின் பேச்சு சிந்தை கவர்ந்தது. அஞ்சாக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சிவநேசன் மற்றும் முனைவர் அனந்தசயனன் அய்யா கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்த கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பொன்னி, முனைவர் மா.பத்மபிரியா, உதவிப் பேராசிரியர்கள் ர.விஜயப்ரியா, ப.மீனாட்சி, நா. கவிதா, ச.தனலட்சுமி, ஜெ.புவனேஷ்வரி, வி.அன்னபாக்கியம், வீ.முத்துலட்சுமி, கு.வளர்மதி, இரா.செண்பகவள்ளி, சு.வினோதா ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதற்கு ஊக்கமளித்திட்ட கல்லூரி முதல்வர் திரு.த.சசிரேகா அவர்களுக்கு நன்றிகள்.