Saturday, February 22, 2014

டிடி பொதிகையில் பாண்டூ (PANDU IN DD POTHIGAI...)

டிடி பொதிகை(DD Pothigai) தொலைக்காட்சியில் 23.02.14 ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு, நான் கலந்துகொண்ட ‘கொஞ்சம் கவிதை... கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்வை பாடலாசிரியர் திரு. பிறைசூடன் அவர்கள் நெறிப்படுத்த, கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் உடன் நானும் கலந்துகொள்கிறோம். தவறாது பார்த்து தங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி.
 - பாண்டூ@9843610020; www.pandukavi16.blogspot.in; pandukavi16@gmail.com.

Friday, February 21, 2014

நான் மனுஷி!

மகளிர்தினச் சிறப்புக் கவிதை


எனது பொறுமை
நசுங்கிக் கொண்டிருக்கிறது
உன் உறவுப் பாறையின்
அடியில்…
மதுவாடை சகிக்க
என் மூக்கு
கல்லால் செதுக்கப்படவில்லை…
மற்றவனின்
புகழ்புராணத்தைப் பொறுக்க
என் காதுகள்
மரத்தாலானவையல்ல…
நானும்
எலும்புகளால்.
தசையால்,
ரத்தத்தால்,
உணர்வுகளால்,
கனவுகளால்,
ஆக்கப்பட்டவளென்பதை
உணர்ந்திருக்கிறாயா நீ?
ஒன்றுக்கு
மூன்று பேரின் உடலை
நீ பகிர்ந்து கொண்டாலும்
ஒழுக்கத்தின்
உச்சியில் நிற்கிறாய்!
நான் உன் காலடியில்
தவம் புரிந்தாலும்
சோரம் போகிறவளாக
சோதிக்கப்படுகிறேன்!
இது
முரண்பாட்டுக் கூச்சல்
மூடர்களின் கூடாரம்
வீசியெறிகிறேன்
இதோ நீ தந்த
மனைவிப்பட்டம்
தாலி, மெட்டி
அடையாளங்கள்
எனக்கெதற்கு….
பயம் உணர்ந்து
உடலை சுருக்குவதும்
உறுப்புகளை
இழுத்துக்கொள்வதும்
ஆமைக்கு உரியது
நான் மனுஷி!
********************
நன்றி : 
https://rammalar.wordpress.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF/

Monday, February 10, 2014

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

மேலும் படிக்க...
www.thozharjeeva.blogspot.in/2014/02/blog-post_10.html

அறிவியல் புரட்சியாளர் சார்லஸ் டார்வின்


        இயற்கை அறிவியலின் ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் டார்வின்  1859 நவம்பர் 2 இல் ‘உயிருனங்களின்  தோற்றம்’ (on the ori-gin of species) என்ற நூலை உடனேயே அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவை கொண்ட பத்திரிக்கைகளும்  இதைக் காழ்ப் புணர்ச்சியுடன் திட்டித் தீர்த்தன. கிருத்துவத் திருச்சபைகள் சாபமிட்டன. அதே சமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாகத் தோன்றியதே தவிர கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்று இவற்றில் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது. மனிதன் விலங்குலகிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டுபிடித்ததானது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞானக் கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க : http://thozharjeeva.blogspot.in/2014/02/blog-post.html

       வாழ்க அவர் புகழ் உலகு உள்ளவரை !
(09.02.2014 சார்லஸ் டார்வின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: ஆர்.பாலச்சந்திரன்,
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
 விருதுநகர் துணைத் தலைவர்.
தொடர்புக்கு:9486207060
நன்றி : www.thozharjeeva.blogspot.in