Tuesday, July 2, 2013

விலைமாது...


விலைமாது

மலரினம்தான் இந்த மாது – இவள்
   மணப்பதுதான் எப்போது ?

வாசனையால் நாடும் வண்டோ -  இவள்
   வாடுவதை அறியாது !

முகத்தினிலே  புன்னகைத் தவழும் – நெஞ்சோ
   முள்ளதனால் துவளும் !

விடியலுக்காய் நாளும் ஏக்கம் – அந்திச்
   சருகாக்கவே பார்க்கும்!

வரமென்றே வாசம் வாங்கி -  அதை
   சாபமென்றே தாங்கி...

பூவெனவே பிறந்து உதிர்ந்தாள் -  இதைப்
   பூவைக்குயார் விதித்தார் ?

-     பாண்டூ
-     த.க.இ.பெருமன்றம்
-     6 ஜவுளிக்கடை வீதி
-    சிவகாசி – 626123
-    9843610020
 -  pandukavi16@gmail.com
 - www.pandukavi16.blogspot.in

No comments:

Post a Comment