விலைமாது
மலரினம்தான் இந்த
மாது – இவள்
மணப்பதுதான் எப்போது ?
வாசனையால் நாடும்
வண்டோ - இவள்
வாடுவதை அறியாது !
முகத்தினிலே புன்னகைத் தவழும் – நெஞ்சோ
முள்ளதனால் துவளும் !
விடியலுக்காய் நாளும்
ஏக்கம் – அந்திச்
சருகாக்கவே பார்க்கும்!
வரமென்றே வாசம்
வாங்கி - அதை
சாபமென்றே தாங்கி...
பூவெனவே பிறந்து
உதிர்ந்தாள் - இதைப்
பூவைக்குயார் விதித்தார் ?
- பாண்டூ
- த.க.இ.பெருமன்றம்
- 6 ஜவுளிக்கடை வீதி
- சிவகாசி – 626123
- 9843610020
- pandukavi16@gmail.com
- www.pandukavi16.blogspot.in
- pandukavi16@gmail.com
- www.pandukavi16.blogspot.in
No comments:
Post a Comment