மனிதா
!
நீ
இச்சைக்குப் பிறந்த
பிச்சைப்
பாத்திரமா ?
பிறந்த
உடனேயே
உன்
தேவைக்காக
அழத்தொடங்கி
விட்டவனே...
வாழ்நாளில்
ஒருமுறையாவது
பிறர்
தேவைக்காக
அழுதது
உண்டா ?
அட்சைய
பாத்திரமாய்
அகிலமே
உன்கையில்
இருந்தும்
பிச்சைக்காரனாய்
நீ !
கோயில்
வாசலில்
கால்ரூபாய்
வீசிவிட்டு
உள்ளே
கோடி கேட்கும்
கைதேர்ந்த
வியாபாரி நீ !
‘கேளுங்கள்
தரப்படும்’ என்றதற்காக
கேட்டுக்கொண்டே
இருப்பவனே ...
என்றேனும்
கேட்டவர்க்கு
எதாவது
தந்ததுண்டா ?
நீ
தவமின்றி
வரம் கேட்பதாலேயே
தலைமறைவாய்
சாமிகள் !
சாமியாய்
ஆசாமிகள் !
உதவி
கிடைக்கும்
என்பதாலேயே
ஊனமாகிப்
போனாய் நீ !
பாலுக்கு
ஆசைப்பட்டுப்
பாடையிலா
படுத்துக்கொள்வது ?
உனக்குத்
தெரியுமா ?
உன்
உயிர் உடலைவிட்டுப்
பிரிந்த
பின்னும்
உயிரோடிருக்கும்
உன்
உறுப்புகளைப்
பற்றி .....!
உனது
இதயம்
காதுகளின்
ஆயுள் உன்னை விட
10
நிமிடம் அதிகம் !
என்ன
வியக்கிறாய் ?
இன்னும்
கேள்...
உனது
மூளை 2 மணி நேரம்
கண்களோ
6 மணி நேரம்
கால்களோ
4 மணி நேரம்
தோலோ
5 நாட்கள்
எலும்போ
30 நாட்கள்
உன்னை
விட அதிகமாய் வாழும் ....
உன்
வியப்பை நிறுத்து !
உயிர்
விட்டுப் போன பின்னும்...
சில
நிமிடம் முதல்
ஒரு
மாதம் வரை
வாழும்
உன் உறுப்புகளோடு
தோற்ற
உனக்காக .....
வருத்தப்படு
!
இருக்கும்
போதே
இல்லாமல்
போனவனே !
இறக்கும்
வரை நீ
பயன்
தாராவிட்டாலும்
பரவாயில்லை...
இறந்த
பின்னாவது
உனது
உறுப்புகளைக்
கொடுத்து
விட்டுப்போ !
உனது
உடைமைகளை
விட்டுவிட்டுப்
போகிறவனே ......
உனது
பிச்சைப் பாத்திரங்களையும்
விட்டுவிட்டுப்
போ !
உனதுயிர்
உடலைவிட்டுப்
போனாலும்
உடல்
சில
உறுப்புகளை
விட்டுவிட்டுப்
போகட்டும் !
புழுக்களுக்கும்
, பறவைகளுக்கும்
வெறும்
உணவாய்ப் போவதை விட;
இலைகள்
, பூக்களைப்போல்
உதிர்ந்த
பின் உரமாய்ப் போ !!
- பாண்டூ,
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
- சிவகாசி – 626123
- சிவகாசி – 626123
- 9843610020
No comments:
Post a Comment