Wednesday, January 1, 2014

செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்...

      செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், 23 டிசம்பர் 2013 அன்று வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

      உயர்திரு கவிஞர் சுரா அவர்கள் தொகுத்த  ‘செந்தமிழ் ஆய்வுக்கோவை' என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. அந்நூலை மலேசியா தமிழ் பல்கலைகழகப் பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்கள் வெளியிட, வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியின் சேர்மன் உயர்திரு. வி.பி.எம்.சங்கர் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

      அவ்விழாவில், கவிஞர் பாண்டூவாகிய எனக்கும், எனது தோழர்கள் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி மற்றும் இ.கி.முருகன் ஆகியோருக்கும் கவிச்செம்மல் என்ற விருதும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளவுரவித்தனர். மேலும், ஆய்வுச் செம்மல், சேவைச்செம்மல், கவிச்செம்மல் என்ற விருதுகள் பத்திற்க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கப்பட்டது.

உயர்திரு. கவிஞர் சுரா அவர்களுக்கும், வி.பி.எம்.எம் கல்வி நிறுவனத்தாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

1 comment:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete