Tuesday, November 15, 2016

கவிஞனின் கனவு

14. 11. 2016. இன்றைய கவிஞனின் கனவு கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_ பாண்டூ அவர்களுக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஒரு கவிஞனின் கனவு குழுவினர்
===============================================

#செல்லாக்காசு
................................
இதய ராஜாங்கத்தின்
காதல் தலைவியாய்
உன்னை வரித்தேன்...

தருணம் பார்த்துக்
காதலை மொழிந்திட
ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் போல்
உயர்மதிப்பான வார்த்தைகளாய்த்
தேடித்தேடி சேமித்தபடி நான்!

என் வார்த்தை வங்கியின்
சேமிப்புகள் யாவும் செல்லாதென....

சற்றும் எதிர்பாராதொரு கணத்தில்
அறிவிப்பை வெளியிட்டபடி
கடக்கிறாய் நீ!
இதோ! தினம்,

நீ வரும் வீதியில் நிற்கிறேன்...
செல்லாக்காசான அவ்வார்த்தைகளைக்...
கவிதையாய் மாற்றியபடி!

இப்போது என் கவலை எல்லாம்...
இந்தக் கவிதைகளை யாரிடம் மாற்றுவது!?!
- *பாடலாசிரியர் பாண்டூ*
- *9843610020*

No comments:

Post a Comment