Saturday, April 6, 2013

ஞானக்குயில் ஞானன் இரங்கலுக்கு, அன்னார் குடும்பாத்தாருக்கு திரு.தி.க.சி எழுதிய ஆறுதல் கடிதம்.




பேரன்புச் சகோதரி அவர்களுக்கு, வணக்கம். கடந்த 30-35 ஆண்டுகளுக்கு மேலாக, எனது உயிர் நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்த கவிஞர் செ.ஞானன் அவர்களின் திடீர் மறைவு, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் போலவே, என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
 கடுமையான இதய நோயாளியான நான், இந்த 88 ஆம் வயதில், தங்களிடம் நேரில் வந்து என் துயறரைத் தெரிவிக்கவும், தங்களுக்கு ஆறுதல் கூறித்தேற்றவும் இயலவில்லை; பெரிதும் வருந்துகிறேன்; பொறுத்தருள்க.
 சிறந்த தமிழ் எழுத்தாளராக மட்டுமின்றி, பண்பு மிக்க சிறந்த மனிதராகவும் – தோழராகவும் – கலைஞராகவும் விளங்கியவர், கவிஞர் ஞானன், அவரது மறைவு, தங்களுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமின்றி. தமிழ்க்கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.........
தங்களுக்கும், குடும்பத்தில் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கவிஞர் ஞானன் மறைவுக்கு, எனது கண்ணீர் அஞ்சலிகள்; காலம் தான் தங்கள் துயருக்கு அருமருந்து, ஆறுதலும் தேறுதலும் பெறுக !
என்றும் அன்புடன்
   – தி.க.சி.   

No comments:

Post a Comment