Saturday, April 27, 2013

ஞானன் அய்யாவிற்கு கவிதாஞ்சலி!


           
            
மெல்லினமாய் தெரிந்த வல்லினமே !
இடையினமாய் வந்த
இடையூருகளை இடறி விட்டு
பயணித்த பயனியே ! –
உன் பாதை நேரானது சீரானது
களப்பணியில் –
சுகப்படுவோருண்டு
சோர்ந்து போவோருண்டு
பாதை மாறீயோறுண்டு
சிலர் பலியாவதுண்டு 
நீ விதி விலக்கு,
மாறாக சிறாக பனிசெய்தாய்,
முழுமை கண்டாய்,
சமரசத்தோடு நீ சமரசம் செய்ததில்லை
எதிர்க்கருத்துள்ளோரும்
உதட்டளவிலே –
உன்னை வசைபாடுவர்
கந்தகமண்ணில் –
கவிப்பயர் வளர்த்த கவிஞனே !
செ.ஞானனே !...
உணர்வுகளுக்கு வயதில்லை ....
இடைவெளியில்லை,
போராளிகளுக்கு துக்கமில்லை,
உனக்கு மரணமும் இல்லை...
நீ விதைத்ததை –
நாங்கள் அறுவடை செய்கிறோம் .
அறுவடை காலம் உள்ளவரை
உன்புகழ் இருக்கும்.
வாழ்க உன் புகழ் !
வளர்க எங்கள் சேவை !!
                              
                          உணர்வுகளுடன்,
                                     M.சேகர்.
                                    15-03-2013
                                     

No comments:

Post a Comment