(பாண்டூவின்
‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)
11. கனவு சுமக்கும் விழி !
கணவாய்ப் போனது
பார்வையற்றோர்க்கு !!
12. சிவன் கோவில் தெற்கு வாசல் !
இன்னும் மூடிக்கிடக்கிறது
!
நந்தனை உள்வாங்கி !!
13. சுதந்திரதின உரை
தொடங்கியது ...
பேசுவதை நிறுத்துங்கள்
!
14. சொல்லித்தர ஆளில்லை !
சொதப்புகிறது
முதற்காதல் !
15.
இணையமுடியவில்லை !
இறந்து போகிறோம் !
இப்படிக்கு நதிகள் !!
16.
ஓடுகிறது ...
அன்று ஆறு !
இன்று மணல் !!
17. கையில் இனிப்பு
நெஞ்சில் ஊசி
சுதந்திரதினம்!?
18.
‘காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்’
கேலியாய்ப் புன்னகைக்கும்
பகத்சிங்கின் தூக்குக்கயிறு
!
19.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்குக்
கேட்டு
வலம்வரும் ‘காந்தி’!
20.
சிணுங்கும் போதெல்லாம்
பேசி அணைத்துக் கொள்கிறேன்
கைப்பேசியை !
தங்களின் தகவல் கண்டேன்... Followers ஆகி விட்டேன் தொடர்கிறேன்... நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தங்கள் ஆலோசனைக்கு நன்றி தோழரே...
ReplyDelete