Friday, October 4, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் கவிதை நூல் வெளியீட்டு விழா

(‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ கவிதை நூல்அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன் வெளியிட, மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு பெற்றுக்கொண்டார்.) படத்தில் : இடமிருந்து வலம் : காமராசு, பாண்டூ, பொன்னீலன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பின்புறம் : டாக்டர் சாந்திலால், பாலசுந்தரம்)

சிவகாசி 12 மே 2013
            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின்  சார்பில் சமீபத்தில் மறைந்த ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் ள் அவர்கள் நினைவு இலக்கிய விழா 12 மே 2013 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரோட்டரி ஸ்பார்க்ளர்ஸ் சொசைட்டி ஹாலில் நடைபெற்றது. 
           மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமையில் தொல்பொருள் ஆய்வாளர் தோழர் பாலசந்திரன் மற்றும் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் த.அறம் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் நினைவுகூறல் நிகழ்வு நடந்தது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன், மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் விச்சலன், வணிக வரிகள் துணை ஆணையர் (பணி நிறைவு) த.சிவசுப்பிரமணியன், சிறுகதை எழுத்தாளர்  முத்துபாரதி, கவிஞர் இலக்கிய ராஜா, பாரதி இலக்கியச் சங்கம் செயலாளர் கவிஞர் ம.திலகபாமா உள்ளிட்ட பலர் ஞானன் நினைவுகளை பகிர்ந்தனர். சேகர் மற்றும் நவீன் ஆகியோர் கவிதாஞ்சலி செய்தனர். ஞானனின் மகள் பாரதிச்செல்வி நிறைவாக பகிர்ந்துகொண்டார்.
           கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொகுத்த, ஞானன் அவர்கள் எழுதிய ’ஓர் அந்திமலரின் சில மகரந்தங்கள்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது மாவட்டத் துணைத் தலைவர் கோதையூர் மணியன் அவர்கள் தலைமை தாங்க சாத்தூர் கிளைத் தலைவர் பழனிக்குமார் முன்னிலையில் மதிப்புறு தலைவர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் நூலை வெளியிட, ஞானன் துணைவியார் உஷா அவர்கள் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.  அம்பை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் புலவர் தெ. சண்முகசுந்தரம், வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை செயலாளர் முனைவர் சு.நயினார் மற்றும் சிவகாசி கிளைத் தலைவர் எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர்.
           மதிய  நிகழ்வுகளுக்கு டாக்டர் ஆர்.எம்.ஆர். சாந்திலால் அவர்கள் தலைமையேற்றார். ஹையர்கிரிவாஸ் பள்ளியைச் சேர்ந்த திருமிகு ஆர்.எஸ்.பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். கவிஞர் பாண்டூ அவர்களின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ என்ற கவிதை நூலும் முனைவர் பொ.நா.கமலா அவர்களின் ‘இறைச்சி பன்முகநோக்கு’  என்ற கட்டுரை நூலும்  வெளியிடப்பட்டன. சாத்தூர் கிளையைச் சேர்ந்த கதைசொல்லி இராம்மோகன் கந்தகப்பூக்கள் யுவபாரதி, நீலநிலா செண்பகராஜன், கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செம்மைநதிராசா, பேராசிரியர்கள் அ.பரமசிவம், கருமுருகானந்தராஜன், கா.ராஜகணபதி மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டச் செயலாளர் சு.வினோத் ஆகியோர் நூல்கள் குறித்து உரையாற்றினர், மாவட்டச் செயலாளர் கண்மணிராசா அனைவருக்கும் நன்றி கூறினார். இராசபாளையம் கிளைச் செயலாளர் பா.முருகேசன் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கினார்.

2 comments:

  1. வணக்கம் உங்கள் பழைய வலைதளமும் பார்த்தேன்..வாழ்த்துக்கள்...இயன்றால் என் தளமும் வாருங்கள். உங்கள் எழுத்தின் நடை நன்று..

    ReplyDelete