Thursday, March 3, 2016

குஜராத்தில் கவியலை

10.1.16 இன்று குஜராத், அகமதாபாத் நகரில் காலை 10 மணியளவில் "Poetrusic" அமைப்பின் கவிதை குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. இவ்வமைப்பின் நிறுவனர் திருமதி.நெஹா அவர்களின் அறிமுக உரையோடு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் உருது மொழியிலிருந்து ஒரு கஜல், ஆங்கில மொழியில் ஒரு Sonnet, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி கவிதைகள் வாசித்து விவாதிக்கப்பட்டன. பாண்டூவாகிய நானும் நிகழ்வின் பங்கு கொண்டேன். அதில் தமிழில் எனது 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' என்கிற கவிதையை வாசித்து ஹிந்தியில் விளக்கம் கொடுத்தேன். மேலும், தோழர் நீல நிலா செண்பகராசனின் 'தீஸ்ரி காண்ட்' என்கிற ஹிந்தி நூலிலிருந்து ஹைக்கூக்கள் வாசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 பேர் கலந்து கொண்டனர். தொல்பொருள் ஆய்வாளர் திரு.அனுப் தேவ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்தும் ஐந்திணை பாகுபாடு குறித்துச் செல்லுமாரு ஆவலுடன் கேட்டுக் கொண்டார். என்னைத் தவிர அனைவரும்
குஜராத்தியர்கள் மற்றும் மராட்டியர்களே.அவர்களின் தமிழ் ஆர்வமும் கவி ஆர்வமும் வியப்பில் ஆழ்த்தியது. நமது நூலையும் ஹிந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என அவாவை கொடுத்தது. மகிழ்ச்சி.
 
 

No comments:

Post a Comment