Tuesday, March 22, 2016

கயல் குட்டி


- பல்லவி -

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வெள்ளை சிரிப்புல கொள்ளை அடிக்குற...
கொள்ளை அழகுல உள்ளம் பறிக்கிற...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

கதிர் ஒளியினைத் தட்டி எழுப்பிட...
கடல் அலையினை எத்தி உதைத்திட...
மணற் கரையினில் நண்டு பிடித்திட...
மன வெளியினில் இன்பம் பெருகிட...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் -1 -

இருகை நீட்டி என்னை அழைத்தாய்...
நான் குழந்தையாக ஆசிர்வதித்தாய்!
மொத்த வானத்தை பார்வையில் மறைத்தாய்!
மழலை மொழியில்  மெல்லிசை வடித்தாய்!

உன்னை நான்தான் சுமந்தேனோ...
என்னை நீதான் சுமந்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் - 2 -

ஒரு கன்னம் காட்ட முத்தம் வைத்தால்...
மறு கன்னம் காட்டி ஏங்கி நிற்பேன்!
வீட்டுச் சுவற்றினில் பாடம் நடத்திநீ
என்னை அதட்ட நானும் ரசிப்பேன்!
உன்னை நான்தான் படைத்தேனோ...
என்னை நீதான் படைத்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

     - பாடலாசிரியர் பாண்டூ.

No comments:

Post a Comment