Monday, March 7, 2016

மகளிர் தினப் பாடல்

மகளிர் தினப் பாடல்
-------------------------------------
            -08.03.2016-

('அல்லா உன் ஆணைப்படி' பாடல் மெட்டில் பெண் பாடுவது போல் எழுதியது)

பல்லவி :
பெண்ணே நம் ஆணைப்படி
எல்லாம் நடக்கும்!
ஓ.. எல்லாம் நடக்கும்!
தொல்லை இல்லாத வண்ணம்..
பெண்ணின் பிறப்பும்
ஓ.. மண்ணில் இருக்கும்!

உயர்பெண்மை போற்றி கொண்டாடிட..
திருநாளும் இன்று உண்டானது..
மண்ணில் சமமாய் ஆணும் பெண்ணும் வாழ..

சரணம் 1:
மாப்பிள்ளை கண்டு கல்யாணம் பேச..
சீர் கொடுக்கும் காலம் இன்றோடு போக!
பார்த்திடுவோம் ஆணிற் கீடான வேலை..
ஊதியமும் இனிஈடாகும் வேளை!

பெண்..
பணிந்து நடந்தால்
பூவுமிங்கு நாகம் ஆகத் துணியும்..
நாம்..
துணிந்து எழுந்தால்
வானம்நம் பாதம் வந்து பணியும்..

பெண்ணை ஆண்
ஆணை பெண்
போற்றும் போது மண்ணில்
மாற்றங்கள் உண்டாகுமே!

சரணம் 2 :
பூப்பறித்து வந்து பொன்னூஞ்சலாடும்,
பூவையினி அந்த விண்ணோடம் ஏவும்!
ஏற்றிடுவோம்   புதிதாய் ஒரு நீதி..
ஆண்களுக்கு வீட்டு அலுவல்கள் பாதி!

வா!
அவதாரம் அனைத்தும்
ஆணாய் ஆன
சூழ்ச்சி கண்டு பிடிப்போம்!

வா!
கைகள் கோர்ப்போம்
காலமிது  நல் சபதம்
தன்னை முடிப்போம்!

வெல்லுவோம்!
வெல்லுவோம்!
ஆணும்  பெண்ணும் சமம்
ஆகாமல் ஓயோமம்மா!!

                 - பாண்டூ,
                - 9843610020.

No comments:

Post a Comment